Wednesday 10 July 2013

Story-9 மழலை


 மழலை -- சிறுகதை 
பிரசித்தி பெற்ற விநாயகர் கோயிலில் கண்ணீர் மல்க மனமுருகி கணவனும் மனைவியும் மனதார ஆண்டவனை வேண்டினார்கள்.அமைதியான சூழலில் ஆள் அரவமற்று கோவில் பளிச்சென்றிந்தது.
ஒன்றாக பின்னி பிணைந்து விருட்சமாக வளர்ந்திருந்த ஆலமரமும் வேப்பமரமும் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தது.
ஆந்த கணவனும் மனைவியும் மனதில் சோகமே உருவாக அந்த மரத்தடியில் போடப்பட்டிருந்த படிக்கட்டில் வந்து அமர்ந்தார்கள்.
“ஏங்க இந்த அரசமரத்தையும் வேப்ப மரத்தையும் எத்தனை வருசம் வந்து சுத்தியிருப்பேன். போகாத கோயிலுண்டா? குளிக்காத குளமுண்டா? இந்த ஆண்டவனுக்கு கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லையா? கல்லுங்கறது சரியா தான் இருக்கு”
“தெய்வானை..தெய்வத்தை நொந்து பயனில்லை. எ ல்லாம் நம்ம விதி”
“நாம என்ன வீடு வாசல் நகை நட்டு காசு பணம் பட்டம் பதவி வேணும்னாக் கேட்டோம்”ஒரே ஒரு குழந்தைதான கேட்டோம்?. கடைசிகாலத்தியே நம்மை அநாதை பொணம்ன்னு ஒதுக்காம கொள்ளி வைக்க ஒரு குழந்தையைத்தானே கேட்டோம்.அதை கொடுக்க மனசில்லாத கடவுளை கல்லுங்காங்காம வேறு எப்படி சொல்றது?”
கணவன் மாரிமுத்து கண்ணீரைத் துடைத்தபடி “எல்லாம் நம்ம விதி”
இவர்களுடைய பேச்சை அமைதியாக எதிர்புறம் அமர்ந்திருந்த 21 வயது மதிக்கத்தக்க வாலிபன் கேட்டுக் கொண்டிருந்தான்.
மெல்ல அமைதியாக அவர்கள் அருகில் வந்து அமர்ந்தான்.
“ஐயா மன்னிக்கனும். உங்களுடைய பிரச்சனையில் தலையிடுகிறேன் என்று தப்பாக நினைக்க வேண்டாம்..”
கணவனும் மனைவியும் வாலிபனை ஏற இறங்க பார்த்தாhகள்.அகன்ற நெற்றியில் சிறிதளவு விபூதி .நடுவே குங்குமம். தெளிந்த முகம். தெளிவான பார்வை.மீண்டும் கணவன்  மனைவியை பார்க்க, மனைவி கணவனை பார்க்க,
“ம். சொல்லு தம்பி”
“இந்த அரச மரத்தையும், வேப்ப மரத்தையும் கோயிலில் நம் முன்னோர் வளர்த்தது ஏன் தெரியுமா?”
கோயிலுக்கு ஆயிரம் பேர் வருவாங்க போவாங்க. நல்லவன் கெட்டவன் அத்தனை பேரும் விடுகின்ற மூச்சில் கிருமிகள் வெளிப்படும் .இந்த வேப்பமரம் காற்றுக்கும் சரி , நிழலுக்கும் சரி கிருமியை அழிக்கின்;ற ஆற்றல் உள்ளது.
அதே போல் தான் இந்த அரசமரமும், கோயிலின் இருக்கும் தேவையற்ற சப்தங்களை தன்னிடம் இழுத்து அடக்கி கொள்ளும் ஆற்றல் இந்த அரசமரத்துக்கு உண்டு.”
ஆமாம் தம்பி. நீ சொல்றது சரிதான்.
“ஏம்பா புள்ளை உண்டாகனும்மின்னா புள்ளையார் இருக்கிற அரசமரம் வேப்ப மரத்தை சுததனுமின்னு, பெரியவங்க தானே சொல்லியிருக்காங்க? எனக் கேட்டாள் தெய்வானை.
உண்மை தானம்மா..சும்மா முணு சுத்து, ஒன்பது சுத்துன்னு சுத்தி பயனில்லை.ஒடம்பில் வியர்வை வெளியே வரணும்.அந்த அளவுக்கு நிறைய தடைவ மனது ஒன்றுபப்ட்டு இரண்டு மரத்தையும் சுத்தனும்.பின் மரத்தடியில் உட்கார்ந்து ரெண்டு மரத்தின் காற்றையும் குறைந்தது கால் மணி நேரம் சுவாசிக்கனும்.கற்ப பையிலுள்ள கிருமிகள் அழியும்.இதுதான் இந்த இரண்டு மரத்தோடு பெருமை. 
எதுக்கும் நீங்க ஒருநல்ல மருத்துவரை கலந்து அவர்; சொல்றபடி செய்வது நல்லது என்றான் அந்த வாலிபன்.
தம்பி நாட்டு வைத்தியம்,சித்த வைத்தியம் எல்லாம் பார்த்தும் எந்தவித பயனுமில்லை. பணம் தான் தண்டமாச்சு. என்று சலித்தபடி சொன்னார் தெய்வானையின் கணவர்.
“அய்யா இப்போ எவ்வளவோ விஞ்ஞானம் வளர்ந்திருச்சு. அறிவியல் முறையில் குழந்தை பெற வசதி வந்துவிட்டது. M D  DGO  போன்ற மேல் படிப்பு படித்த டாக்டரை பாருங்கள்…கட்டாயம் ஒரு நல்ல பலன் கிடைக்கும்”
கணவனும் மனைவியும் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. இருவரும் தலையை குனிந்துக் கொண்டார்கள்.தெய்வானை தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்.
வாலிபனுக்கு ஏதோ போலாகியது.
கணவன் மனைவியை அணைத்தபடி கண்களை துடைத்துவிட்டு,
தாழ்ந்த குரலில் அதற்கு வழியுமில்லை தம்பி.
ஐயா…நீங்க சொல்றது…”
ஆமாதம்பி …நாட்டு வைத்தியர் கொடுத்த மாத்திரையை சாப்பிட்டதால என் மனைவியின் கற்பப்பை புண்ணாகி கடைசியில் கற்ப்பபையை எடுத்துவிட்டோம் என கண்ணீர் பொங்க சோகமாகானார்.
அரச மரத்திலிருந்து படபடவென றெக்கையை அடித்துக்கொண்டு  நிறைய பறவைகள் பறந்தன.
ஐயா கவலைப் படாதீங்க. எத்தனையோ அனாதை மடங்கள்   உள்ளது. ஆதில் ஏதேனும் ஒரு குழந்தையை சட்டபடி எடுத்து வளருங்களேன். ஏன்று வாலிபன் சொன்ன பின்பு கணவனும் மனைவியுமு; ஒருவருக்கொருவர் கண்களால் பேசிக் கொண்டனர். 
வாலிபனின் கையைப் பிடித்தபடி தம்பி இந்த யோசனையும  இருந்துச்சு. ஆனா அந்த குழந்தை ஏழையாவும்ஈ அதே சமயம் தாய் தகப்பன் இல்லாத அனாதையாவும இருக்கணும் . அப்பதான் அது எங்களை உண்மையான தாய் தகப்பனா நினைச்சு வளரும்.ஆனா அந்த மாதிரி கிடைக்கலயே..”
கண்டிப்பா இந்த உலகத்தில் நீங்க சொல்கிற மாதிரி ஒரு குழந்தை கிடைக்கும் அய்யா…கவலை படாதீர்கள். ஆண்டவன் நிச்சயம் உங்களுக்கு நல்ல வழி காட்டுவான்.என்று சொல்லியபடி விடை பெற்றான் அந்த வாலிப்ன். சில பறவைகள் அந்த வேப்பமரத்தில் வந்து ஒய்யாரமாக அமர்ந்தன.

ஒரு மாதம் கழித்து, கோவை வீரபாண்டி பிரிவில்…
பச்ச ஒடம்புக்காரின்னு கூட பாக்காம…நீ  பண்ணுனது கடவுளுக்கே பொறுக்காது டீ” இன்னும் கெட்ட வார்த்தைகளால் பொரிந்து தள்ளிக்கொண்டிருந்தாள் 23 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்.

சு;சீ…ஓடுகாளி அவுசாரி…கூடப்பிறந்தவ மாதிரி உன்னை பார்த்துக் கொண்டு, பிரசவத்துக்கெல்லாம் செலவுச் செஞ்சு பாத்துக்pட்டதுக்கு எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.” இது அந்த சுப்பம்மா.

இன்றைக்கு பொது கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆள் சேர்க்கிற நிலையில,; காசு வாங்காமலேயே அவர்களை சுற்றி ஒரு பெரும் கூட்டம் சேர்ந்தது.

முன்னால் நாம் சந்தித்த அதே வாலிபன் போலிசுக்கு போன் செய்தான். சுற்று நேரத்தில் போலிஸ் இரு பெண்களையும் ஜீப்பில் ஏற்றிச் சென்றது.

காவல் நிலையத்தில் ஆய்வாளர் மாலதி விசாரணையை துவக்கினார்.
“அம்மா நான் கூலி வேலை செய்த போது மேஸ்திரியை காதலித்து கல்யானம் பண்ணிட்டேன்.புருசன் குடிகாரன்.தினம் தினம் அடி உதைதான். பொறுக்க முடியாமல் சித்தி வீட்டுக்கு ஓடி போனேன்.
அவர்கள் என்னை ஏற்கவில்லை. எங்க போறதுன்னு தெரியலே..அப்ப தான் இந்த சண்டாளி எனககு அறிமுகமானா…”

அதற்குள் அந்த பெண்…
“அம்மா இவ என்னை சந்திச்சப்ப இவ நாலு மாசம் உண்டாயிருக்கறதாவும், கருவை கலைக்கணுமின்னும் சொன்னா.

நான் தான் வேண்டாம்..உனக்கு நல்லபடி பிரசவம் பார்த்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.ன்னு சொல்லி 7 மாசத்திற்க்கு அப்புறம் நான்தாம்மா அவளுக்கு வேண்டியதை நானே செஞ்சு அவ பிரசவத்தையும் பாத்துக்கிட்டேன்.”
ஆவேசாம்மா பேசிக் கொண்டிருந்த சுப்பம்மாவை..கோபத்துடன் இடைமறித்தாள் அந்த பெண்.

“புள்ளை பிறந்தது. ஆதை நல்ல விலைக்கு வித்துடுலாம். ஆஸ்ப்பிட்டல் செலவு போக ஆளுக்கு பாதிழன்னு சொல்லி நான் பெத்த ரெண்டு குழந்தைகளையும் எனக்கு தெரியாமல் பெத்த நாளே வித்துட்டாம்மா…எனக்கு பணமும் தரல..வீட்டை விட்டு துரத்தி விட்டுட்டாம்மா..”
இல்லைம்மா…அவ…என்று சுப்பம்மாள் சொல்ல வருவதற்குள்…
மாலதி தன் கையில் லத்தியை எடுத்து நாலு போடு போட்டார்…உண்மையை சொல்லுடி… குழந்தைகள் எங்கே? யார் கிட்ட வித்த?”

அய்யோ..அடிக்காதீங்க..உண்மையை சொல்லிடறேன்.

“ரைட்டர் இந்த மூதேவி சொல்றதை வாக்குமூலமா எழுதுங்க…”
அடுத்த 1 மணி நேரத்தில் ஆய்வாளர் 7 பேர் கொண்ட கும்பலை அள்ளிக் கொண்டு வந்தது.

அதில் நாம் முதலில் சந்தித்த அந்த கணவன் மனைவியும் இருந்தார்கள்.
“ஏய்..இங்க வா…உன் பேரு என்ன..ஃ”
“தெய்வானை ங்கம்மா”
என்ன நடந்ததுன்னு உணைமையைச்  சொல்லு. பொய் கிய்யுன்னு சொன்ன..மவளே  தெரியுமில்லை என்ன நடக்குமின்னு?

“அம்மா எனக்கு ஒரு அனாதை கொழந்த வேணும்ன்னு கேட்டிருந்தேன்..அதோ அந்த பொம்பளதான் என் தங்கச்சி பிரசவத்துல குழந்தையை பெத்துப் போட்டுட்டு அனாதையை எங்களையும் இந்த குழந்தைகளையும் விட்டுட்டு போயிட்டா…இதுகளை வேணும்ன்னா நீங்க எடுத்துக் கோங்க…ன்னு சொல்லி பணத்தை வாங்கிட்டு குழந்தையை ஒரு மாசததிற்கு முன்னாடி எங்கிட்ட கொடுத்தாம்மா…வேற எதுவும் எனக்கு தெரியாதும்மா..”என்று ஆய்வாளர் காலில் விழுந்த தெய்வானை “அம்மா தயவுசெஞ்சு இந்த குழந்தையை என்னிடமிருந்து பிரிச்சிராதிங்கம்மா..” என்று கதறினாள்.

போலிஸ் குழு கவனித்த கவனிப்பில், அந்த கும்பல் ஒரு சமூக விரோத செயல்களை நீண்ட காலமாக செய்து வந்தது தெரிய வந்தது.
தடமாறி வந்தவர்களை விபச்சாரத்தில் ஈடுபட வைத்ததும், குழந்தை பிறந்தால் அதை விற்று விடுவதுமாக அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

அங்கு வந்த அந்த வாலிபன், ஆய்வாளர் மாலதியை பார்த்து,
அம்மா நான்தான்மா உங்களுக்கு போன் பண்ணினேன். இந்த பிரச்சனைக்கு நான்தான்மா காரணம்.”

என்ன சொல்ற?’
“ஆமாம்மா..இந்த பெண்தான் என்னோட பொஞ்சாதி..ஒரு காலத்தி;ல் மனசு சரியில்லாம குடிப் பழக்கதிற்கு அடிமையானேன். நூன் ஒரு மேஸத்திரியாய் இருந்ததனாலே..கிடைத்த் பணத்;தையெல்லாம் தண்ணியடிக்கவே செலவு செஞ்சேன், பொண்டாட்டி என்னய்ய விட்டுட்டு ஓடீட்டா.. அப்புறம் கொஞ்ச நாளுக்கு பிறகு மனம் திரும்;பி வந்து பார்த்தால் மனைவியைக் காணோம்.”
சொல்லி முடிப்பதற்க்குள்..அவன் மனைவி ஓடி வந்து அவனைக் கட்டி பிடித்தாள்..”என்னைய மன்னிச்சிருங்க…”

“இந்தாப்பா உன் மனைவிய சந்தோசமா கூட்டிட்டு போ..ஆனா கோர்ட் கேசுன்னு விசாரணைக்கு கூப்பிட்டா வரணும் தெரிஞ்சதா? இந்தா உன் குழந்தைகள்”

“அம்மா…,இதுல ஒரு குழந்தைய அந்த தம்பதிகளிடமே கொடுக்க விருப்பப்படறேன். ஏனக்கு அவங்களை முன்னமே தெரியும். புhவம் கோயிலில் அவர்கள் அழுத அழுகை இன்னமும் என் கண்ணில் நிற்கிறது. அவர்களே என்னுடைய இந்த ஒரு குழந்தையை வளர்க்கட்டும். இந்த குழந்தை அவர்களுக்கே சொந்தம். நாங்க எக்காலத்திலேயும் 
சொந்தம் கொண்டாடமாடடோம்ன்னு எழுதி தர்றோம் ம்மா”

கண்கள் குளமாக அந்த வாலிபனையே பார்த்துக் கொண்டிருந்தாள்…..தெய்வானை.

No comments:

Post a Comment